டூவீலர்கள் மோதலில் ஒருவர் பலி

மதுரை, செப். 17: மதுரை அருகே கள்ளிக்குடி தாலுகா கே.வெள்ளகுளத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(42). இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரும், இவர் பணியாற்றும் பனியன் கம்பெனி ஆபரேட்டர் பழனிபாபுவும் டூவீலரில் சென்றனர். இவர்கள் வலையன்குளம் சோழன்குருணி ரோட்டில் சென்றபோது எதிரே வந்த டூவீலர் அவர்களது வாகனம் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்த்திபனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனிபாபு அளித்த புகாரின் பேரில், பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதலில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: