நத்தம் அருகே மின்கம்பத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

நத்தம், செப். 17: வடமதுரை அருகே கானப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் குணசீலன் (24). தனியார் பனியன் கம்பெனி ஊழியர். இவர் நேற்று இவர் தனது டூவீலரில் நண்பர்கள் வீரமணி (24), ரமேஷ் (24) ஆகியோருடன் குடகிப்பட்டி புதூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் ஊர் திரும்பினர். குடகிப்பட்டி அருகே இந்திரா காலனி பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post நத்தம் அருகே மின்கம்பத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: