ஆறுமுகநேரி அருகே பனை காட்டில் திடீர் தீ

ஆறுமுகநேரி, செப். 17: ஆறுமுகநேரி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் மேற்கு பகுதியில் உள்ள பனை காட்டில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காமராஜபுரத்தை பெருமாள் மகன் வரதன் உட்பட 3 பேருக்கு சொந்தமான இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறை அதிகாரி மோகன் தலைமையிலான வீரர்கள், தீயணைப்பு வாகனம் உள்ளே செல்ல முடியாததால் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை வாளி மற்றும் குடங்களில் எடுத்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். ஆறுமுகநேரி போலீசார், கவுன்சிலர்கள் சிவகுமார், சந்திரசேகர் உட்பட அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தீயை மேலும் பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

The post ஆறுமுகநேரி அருகே பனை காட்டில் திடீர் தீ appeared first on Dinakaran.

Related Stories: