தமிழக மீனவர்களுக்கு மொட்டை இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 7ம் தேதி அபராதத் தொகையை கட்டியுள்ளனர்.

ஆனால், கடந்த 6ம் தேதியே அபராதம் செலுத்தவில்லை என்று கூறி தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து இலங்கை அரசு கொடுமையையும், அவமதிப்பையும் செய்துள்ளது. இதை மன்னிக்க முடியாது. தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் குழுவை அனுப்பி, பிரதமரை சந்திக்கச் செய்து இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழக மீனவர்களுக்கு மொட்டை இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: