நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் – தர்மபுரி செல்லும் சாலையில், தனிநபர் ஒருவர், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து, நிரந்தர கட்டிடம் கட்டுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரில், உதவி பொறியாளர் நரசிம்மன் தலைமையில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு, வேலி அமைத்து தகவல் பலகை வைத்தனர்.

The post நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: