ஐ-போனும்… ஆட்டோ டிரைவரும்…

புதுச்சேரி: புதுச்சேரி செட்டி தெரு- மிஷின் வீதி சந்திப்பில் உள்ள ஆட்டோவில் சென்ற நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா பெண் பயணி தனது ஐ-போனை தவறவிட்டு சென்றார். இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுனர் அவரை இறக்கிவிட்ட தங்கும் விடுதிக்கு சென்று, நேபாள பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி பேசி உள்ளார். அப்போது அவர் தான் ஊருக்கு கிளம்பி விட்டதாக கூறியுள்ளார். உடனே ஆட்டோ ஓட்டுனர், பேருந்து எங்கே செல்கிறது என்று கேட்டு விரட்டி சென்று ஐ-போனை ஒப்படைத்தார்.

The post ஐ-போனும்… ஆட்டோ டிரைவரும்… appeared first on Dinakaran.

Related Stories: