ஏரிக்கரை பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு பெரணமல்லூர் அருகே அரசு பள்ளி சார்பில்

பெரணமல்லூர், செப்.13: பெரணமல்லூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் ஏரிக்கரை பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் கொழப்பலூர் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மீனாட்சி தலைமை தாங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெரிய ஏரி கரையின் இரு பகுதிகளிலும் ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்து சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஏரிக்கரை பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு பெரணமல்லூர் அருகே அரசு பள்ளி சார்பில் appeared first on Dinakaran.

Related Stories: