கடன் தொல்லையால் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி, செப்.13: தர்மபுரி பிடமனேரி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா(22). ஆட்டோ டிரைவரான இவர் கும்பகோணம் பகுதியை சேர்ந்த கார்த்திகா(20) என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு, இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கார்த்திகாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் கும்பகோணம் சென்று விட்டார். நேற்று முன்தினம், வீட்டில் இருந்த சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் சூர்யாவுக்கு அதிகளவு கடன் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: