திமுக பவளவிழா நிறைவு கொண்டாட்டம் திமுகவினர் வீடுகளில் கொடியேற்றம்

நாகர்கோவில், செப்.13: திமுக 1949ம் ஆண்டு அண்ணாவால் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திமுக கொடிக்கம்பங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பித்து அண்ணா பிறந்தநாளையொட்டி கொடியேற்ற வேண்டும். மேலும் திமுக நிர்வாகிகள், உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினர் வீடுகளிலும் செப்டம்பர் 15ம் தேதி காலையிலேயே கொடி ஏற்றி திமுக பவள விழாவை குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதற்கேற்ப திமுக சார்பில் அதன் நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தற்போது திமுக கொடியேற்ற தொடங்கியுள்ளனர். நாகர்கோவில் கோணத்தில் உள்ள திமுக மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தனது இல்லத்தில் நேற்று திமுக கொடியேற்றினார். துணை மேயர் மேரி பிரின்சி லதா, டேவிட்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திமுக பவளவிழா நிறைவு கொண்டாட்டம் திமுகவினர் வீடுகளில் கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: