மகாவிஷ்ணு பேச்சு விவகாரம் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

சென்னை: சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள மாதிரிப் பள்ளியில், மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊட்டும் உரையாடல் நிகழ்வில் மதுரையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, தற்போது மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கடந்த 6ம் தேதி விசாரணை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக விசாரணை அறிக்கை தயார் செய்யும் பணி நடந்த நிலையில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் மதுமதியிடம், இயக்குநர் கண்ணப்பன் நேற்று அந்த அறிக்கையை ஒப்படைத்தார்.

The post மகாவிஷ்ணு பேச்சு விவகாரம் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: