இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் இன்று முதல் தொடங்குகிறது. அந்த வகையில், ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
The post பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது; தொடங்கிய 5 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன appeared first on Dinakaran.