ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, செப்.18: மிலாது நபி, விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பூங்கா, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதுமாக குளுமையான, இயற்கை பசுமை நிறைந்த பகுதியாக ஏற்காடு திகழ்வதால் நாள் தோறும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மிலாது நபி விடுமுறையையொட்டி காலை முதலே ஏற்காட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி தொடங்கினர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, குகை கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி, காட்சி முனை பகுதிகள் மற்றும் படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள பழக்கடைகளில் பல்வேறு வகை பழங்களை வாங்கி சென்றனர். நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்ததால், அனைத்து கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

The post ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: