வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ கார் மீது ஆளும்கட்சியினர் கல்வீச்சு

*அமராவதியில் பரபரப்பு

திருமலை : ஆந்திர மாநிலம் பல்நாடு, அமராவதி மண்டலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நம்புரு சங்கர ராவ் காரில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்றார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வருகையை அறிந்த ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அங்கு வந்து முன்னாள் எம்.எல்.ஏ கார் மீது கற்கள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினர்.

போலீசார் முன்னிலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசார் தடுக்க முயன்றும் துரத்தி சென்று தாக்கினர். இதனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்காமல் எம்எல்ஏ திரும்பி சென்றார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வாகனத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ கார் மீது ஆளும்கட்சியினர் கல்வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: