முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 3,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு தஞ்சாவூரில் நாளை மின் தடை

 

தஞ்சாவூர், செப். 11:தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என்று உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (12ம் தேதி) காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர் , முனிசிபல் காலனி, ஆர்.ஆர்.நகர், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன் நகர், ஜெபமாலைபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 3,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு தஞ்சாவூரில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: