வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகள் இங்கு நடைபெற்றுள்ள நிலையில், முப்பெரும் விழாவும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற மாநாடுகளை விட பிரமாண்டமாக இம்முறை மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் 65 ஆயிரம் இருக்கைகள், 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பவள விழாவையொட்டி 75 அடி உயர திமுக கொடி பறக்க உள்ளது. திமுக சாதனைகள் குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்தம் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏஐ (AI) தொழில் நுட்ப வசதியும் இந்த மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது. 2026ல் 200க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெரும் என்று முதல்வர் கூறி அதற்காக செயல்பட்டு வருகிறார். அதற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திமுக முப்பெரும் விழா ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்ட மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.