மதுரை படிப்பக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

 

மதுரை, செப். 10: மதுரை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டம் மற்றும் எம்பி சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஒருகிணைந்த படிப்பக வளாகத்தில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  திறந்தவெளி பூங்கா அமைப்பில் உள்ள படிப்பக வசதிகள் மற்றும் கட்டிட வசதியுடன் கூடிய படிப்பக அறைகளில் ஆய்வு செய்து அங்கு வருகை தந்திருந்த மாணவர்கள், இளைஞர்களிடம் கலந்துரையாடினார்.

மேலும் அங்கு படிபதற்காக வருவோருக்கு மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை, காற்றோட்டம் போன்ற வசதிகள் முறையாக உள்ளனவா என ஆய்வு செய்து, அவற்றை முறையாக பராமரிக்க அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்பி சு.வெங்கேடசன் எம்பி, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்எல்ஏ பூமிநாதன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

The post மதுரை படிப்பக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: