மணிப்பூரில் ராக்கெட் வீசி தாக்குதல்: 2 கட்டிடங்கள் சேதம்

இம்பால்: மணிப்பூரில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாநிலத்தில் அமைதியின்மை நிலவி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு கும்பி கிராமத்தில் ஏராளமான டிரோன்கள் சுற்றி வந்தன. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மலை பகுதியில் இருந்து ட்ரோங்லாவோபியின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உள்ளூர் சமூதாய கூடம் மற்றும் அருகில் இருந்த கட்டிடம் ஒன்று சேதமடைந்தது.

 

The post மணிப்பூரில் ராக்கெட் வீசி தாக்குதல்: 2 கட்டிடங்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: