சென்னை: மாற்றுத்திறனாளிகள் சங்க புகாரை அடுத்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாவிஷ்ணு மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து சைதாப்பேட்டை போலீஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.