பழைய பென்சன் திட்டம் கோரி

 

மதுரை, செப். 6: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை தல்லாகுளம் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார்.

செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மாநில தலைவர் சுரேஷ், தோழமை சங்க நிர்வாகிகள் சந்திரன், கணேசன், சீனிவாசகன், பாஸ்கரன், தீனன், நீதிராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post பழைய பென்சன் திட்டம் கோரி appeared first on Dinakaran.

Related Stories: