தந்தையை தாக்கிய மகன் கைது

 

வடமதுரை, செப். 6: வடமதுரை அருகே தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (54). நேற்று முன்தினம் இவரது தம்பி அம்மாசி, முனியப்பன் வீடு கட்டி குடியிருக்கும் இடத்தை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் மறுத்துள்ளார். அப்போது முனியப்பனின் மகன் சதீஷ்குமார் (30) ஏன் சித்தப்பாவிடம் பிரச்னை செய்கிறாய் என கேட்டு தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது தகராறு முற்றிய நிலையில் சதீஷ்குமார் பாத்ரூமில் இருந்த பிளேடை எடுத்து வந்து முனியப்பன் உடலில் கீறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முனியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் வடமதுரை எஸ்ஐ சித்திக் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தார்.

 

The post தந்தையை தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: