10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்க கூடாது

 

ஈரோடு, செப். 6: ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயகங்களை வணிக நிறுவனங்கள், வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெற மறுப்பு தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக் கூடாது.

சட்டபூர்வமான நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் ஆகியோர் தங்களுக்கு எவரிடமிருந்தும் வரப்பெறும் 10 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post 10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்க கூடாது appeared first on Dinakaran.

Related Stories: