திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், செப். 5: திண்டுக்கல் வணிகவரி துறை அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பிடெரிக் ஏங்கல்ஸ், தமிழ்நாடு வணிக வரி பணியாளர் சங்கத்தின் மாநில செயலர் திரவியராஜா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

The post திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: