மது விற்பனை செய்த வழக்கில் 61 பேர் கைது

அரூர், செப்.4: அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் 31ம்தேதி வரையிலும் நடத்திய சோதனையில், அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபானம் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில் ஒட்டல், பொட்டிக்கடையில் குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் 14 பெண்கள் உள்பட 61 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,204 மதுபாட்டில், கஞ்சா 4 கிலோ மற்றும் 2 டூவீலர் ஆகியற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

The post மது விற்பனை செய்த வழக்கில் 61 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: