அந்த வீடியோவை காண்பித்து யாரிடமும் செல்லக்கூடாது. மீறி சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என காதலன் சிலம்பரசன் மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாணவியின் உடலில் மாற்றம் தெரிந்ததால் கடந்த மாதம் 31ம்தேதி அவரது தாயார் விசாரித்தபோது, மாணவி நடந்த விஷயத்தை தாயிடம் கூறியுள்ளார். 3 மாதம் கர்ப்பமாக இருந்ததால், சிலம்பரசன் கருகலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிந்த மாணவியின் உறவினர்கள் சிலம்பரசனை கண்டித்தபோது, அவர்களிடமும் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக மாணவி மற்றும் தாயார் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரை நேற்று மாலை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில், தன் மகளுக்கு நடந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும். 5 நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென என தெரிவித்துள்ளார்.
The post குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.