இந்த வழக்கு தொடர்பாக, முகாந்திரம் இருப்பின் அவரை கைது செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார், கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் உள்ள அவரது வீட்டருகே நேற்று மதியம் கைது செய்தனர். மேலும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்து சென்று போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் அதிரடி கைது appeared first on Dinakaran.