இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர் சிவகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு இல்லாமல் ரூ.25 லட்சம் நிவாரண நிதி விழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் உதவி கமிஷனர் சிவகுமார் உடல் அவரது வீடான அம்பத்தூர் ஒரகடம் அய்யா தெருவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை மற்றும் சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உயிரிழந்த உதவி கமிஷனர் சிவகுமார் உடலுக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகுமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார். அதனை தொடர்ந்து உயிரிழந்த சிவகுமார் உடல் நேற்று மாலை முழு அரசு மரியாதை மற்றும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
The post பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர் உடலுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அஞ்சலி: முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சத்தை குடும்பத்தினரிடம் வழங்கினார் appeared first on Dinakaran.