வளவம்பட்டியில் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள் தேர்வு

 

கந்தர்வகோட்டை, செப்.1: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெற்றது. அதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக லிசிபாரதி சிவனேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார் . புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாமா பாலமுருகன், தலைமையாசிரியர் மல்லிகா மற்றும் ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி,முன்னாள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் லட்சுமி , நந்தினி , சாமி. ரங்கராஜ் கோவிந்தராசு, சேகர், இளையராஜா, கார்த்திகா பாஸ்கர், மற்றும் பொது மக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post வளவம்பட்டியில் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: