நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்: ஐகோர்ட் கிளை காட்டம்

மதுரை : நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள் என்று ஐகோர்ட் கிளை காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் வழக்கு விசாரணை மாறுவதால் அவமதிப்பு வழக்கில் இருந்து அதிகாரிகள் தப்பிகின்றனர் என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நிரந்தர அமர்வு முன்பு பட்டியலிட இதுவே சரியான நேரம் என தோன்றுகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மணப்பாறையைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

The post நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்: ஐகோர்ட் கிளை காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: