அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், அங்கு மாவா தயாரித்து கொண்டிருந்த பவூத்மியான் என்பவரின் மகன் பெரோஸ் (41) என்பவரை கைது செய்தனர். பின்னர், மாவா என்கிற குட்கா பொருட்களை தயாரிப்பதற்கு வைத்திருந்த 5 கிலோ பாக்கு சீவல், 1 கிலோ ஜர்தா, கிரைண்டர் மற்றும் பேக்கிங் கவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுதது, கைது செய்யப்பட்ட பெரோல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மறைமலைநகர் அருகே குட்கா தயாரித்து விற்ற வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.