தமிழகத்தில மழை நீடிக்கும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

சென்னை: வங்கக் கடலில் மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30-40 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்பும் உள்ளது. இது தவிர, 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post தமிழகத்தில மழை நீடிக்கும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது appeared first on Dinakaran.

Related Stories: