முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றடைந்தார்; சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார்

சென்னை: அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களுக்கு 19 நாள் அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 10.17 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது:
‘‘பல்வேறு முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நம்முடைய இலக்கு விரைவாக எட்டப்படும்’’ என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் வழியாக இன்று பிற்பகல் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு முதல்வருக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று (29ம் தேதி) சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதல்வர் உரையாற்றுகிறார்.

31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 10 நாட்கள் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுகிறார். அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி சென்னை திரும்ப முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றடைந்தார்; சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார் appeared first on Dinakaran.

Related Stories: