ஆர்.கே.பேட்டை அருகே குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் மற்றும் அம்மனேரி, பன்னூர், வெள்ளாத்தூர் வழியாக ஆர்.கே.பேட்டைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. கொண்டாபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக இருக்கும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

கொண்டாபுரம் ஏரிக்கரை மீது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: