சென்னையில் விதிகளை மீறிய 2 மதுபான விடுதிகள் மீது வழக்கு..!!

சென்னை: சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அனுமதித்த நேரத்தை தாண்டியும், அதிக ஒலியுடன் ஆடல், பாடல் நடப்பதாகவும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், நுங்கம்பாக்கம் மற்றும் புதுப்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பேட்டை மதுபான விடுதி மேலாளர், ஊழியர்களை அழைத்து காவல்துறையினர் கண்டித்து விடுதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் விதிகளை மீறிய 2 மதுபான விடுதிகள் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: