இந்நிலையில், கண்ணன், திருப்பதி ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மிரட்டல் விடுக்க தூண்டியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யூடியூபருமான திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் மீது தில்லைநகர் ேபாலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுதொடர்பாக மேலும் 41 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டையை சேர்ந்த சண்முகம் (34) மற்றும் மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான்(22) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில், மீதமுள்ள 39 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post எஸ்பிக்களுக்கு கொலை மிரட்டல்; நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது: மேலும் 39 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.