மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

 

திண்டுக்கல், ஆக. 26: திண்டுக்கல்லில் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முகமது முபாரக் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பிரபு, மாநில பொருளாளர் கார்த்திகேயன், அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொருளாளர் கார்த்திக் வெங்கடேசன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் மகேந்திர குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், 502 தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடங்களை, மீண்டும் தரம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்டத் துணை தலைவர் பொன் இளங்கோ, நிர்வாகிகள் ராஜேஷ்குமார், முரளி, தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கருத்த பாண்டி நன்றி கூறினார்.

The post மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: