மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் எம்எஸ்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை

தியாகராஜ நகர், ஆக. 24: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள எம்எஸ்சி கணினி அறிவியல் படிப்பில் சேர தகுதியான மாணவ- மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்து பயில ஒரு சில காலியிடங்கள் மட்டுமே உள்ளன. இதில் சேர்ந்து பயில விரும்பும் தகுதியான மாணவ- மாணவிகளிடம் இருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமும், தகுதியும் நிறைந்த விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்ப கட்டணம், நுழைவு கட்டணம் ஆகியவற்றுடன் ஆக.27ம் தேதி மாலை 4.30 மணிக்குள் துறைத்தலைவரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

The post மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் எம்எஸ்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: