குறிப்பிட்ட 245 பள்ளிகளிலும் உயர்தர சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் வகையில் குறிப்பிட்ட பணிகளுக்காக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்க விரும்புவர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பித்த பின்னர் 30ம் தேதி டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். பின்னர் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தக்கூடிய பணிகளில் அடுத்த 2 மாதத்திற்குள் முடிப்பதற்கும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இன்றி சுமுக தீர்வுகளை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் பள்ளிக்கூட வளாகத்தை கண்காணிப்புக்கு கீழ் கொண்டுவரக்கூடிய வகையிலும் சென்னை மாநகராட்சி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
The post சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.6.5 கோடி டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.