ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு

 

திருப்பூர், ஆக.23: திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், போலீஸ் கமிஷனர் லட்சுமி ஆகியோர் தினசரி பெறப்படும் கோரிக்கைகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், வடக்கு மாநகர துணை ஆணையாளர் சுஜாதா, தெற்கு மாநகர துணை ஆணையாளர் யாதவ் அசோக் கிரிஷ், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

The post ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: