புதுப்பட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டேன்: பூஜா ஹெக்டே உருக்கம்

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிப்பவர், பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘முகமூடி’ படத்தில் நடித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கு படவுலகில் கவனம் செலுத்தினார். பிறகு பாலிவுட்டுக்குச் சென்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அவர், சமீபத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், அடுத்து என்ன செய்வது என்று தீவிர யோசனையில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில், பாலி வுட் முன்னணி நடிகர் சல் மான்கானுடன் அவரை இணைத்து காதல் கிசு கிசுக்கள் வெளியானதால் டென்ஷனாகி விட்டார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி: சினிமாவில் நடிக்க வந்தவுடனேயே வெற்றி கிடைத்து விடவில்லை. திரையுலகில் எனது 11 வருட பயணம் என்பது, ரோலர் கோஸ்டர் ரெய்டு போல் ரொம்ப ரிஸ்க்கானது. முதலில் தமிழிலும், தெலுங்கிலும் நடித்தேன். அப்போது எனக்கு மாநில மொழிகள் தெரியாது என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் மிகவும் கஷ்டப்பட்டேன். இதுவரை பல கஷ்டங்களைச் சந்தித்து, அதன் சாதக, பாதகங்களையும் ஏற்றுக்கொண்டு துணிச்சலாக முன்னேறி வருகிறேன். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதனால், புதுப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். அப்போது எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து இப்போது ஏனோ வெளியே ெசால்ல முடியவில்லை. இந்நிலையில், திடீரென்று எனக்கு புதுப்பட வாய்ப்பு குவிந்தது. மீண்டும் நான் நடிப்பில் பிசியாகி விட்டேன். எனது குடும்பத்தினர் யாரும் சினிமாவில் கிடையாது. இப்போது சினிமாவை என் குடும்பமாக ஏற்றுக் கொண்டேன். சினிமாவில் நான் சந்தித்த சில அனுபவங்கள், யாருக்காவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட உத்வேகத்தை அளிக் கும் என்றால், அதுவே எனக்கு கிடைத்த வெற்றிஎனலாம். சினிமாவில் மட்டுமல்ல, வேறெந்த துறையை எடுத்துக்கொண்டாலும், கஷ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது என்பதே நிஜம்.

The post புதுப்பட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டேன்: பூஜா ஹெக்டே உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: