இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்ததற்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, தலைவர் கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்ததற்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி. கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்தீர்கள். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு நீங்கள் அளித்த இதயப்பூர்வமான அஞ்சலிக்கு நன்றிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்கலைஞருக்கு பாராட்டு மழை ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி appeared first on Dinakaran.