விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோடை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தற்போது 3ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. 2ம் கட்ட அகழாய்வு முடிவு வரை சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. இவைகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 3ம் கட்ட அகழாய்வில் நேற்று முன்தினம் சுடுமண் முத்திரைகள், விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கிடைத்துள்ளன. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விஜயகரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 1,700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நமது முன்னோர்கள் பயன்படுத்தியவையாகும்’ என்றனர்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: