அங்கு, கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார். கடலில் செல்லும் மீனவர்கள் படகுகளில் ஒரு டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அந்த டிரான்ஸ் மீட்டரில் இருக்கும் சிவப்பு பொத்தானை ஆபத்து காலத்தில் அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞை கிடைக்கும். உடனே உதவிக்கு கடலோர காவல் படையினர் செல்வார்கள். இந்த அதிநவீன வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல் பாட்டுக்கு வருகிறது. மேலும் புதுச்சேரி கடலோர காவல் படை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து கடலோர காவல் படையினர் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதையும் ராஜ் நாத்சிங் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து காரில் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் செல்கிறார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங்கை வரவேற்கிறார். பின்னர் கலைஞர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தி விட்டு கண்காட்சியையும் பார்வையிடுகிறார். பின்னர் 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் ராஜ்நாத்சிங் நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வருவதை முன்னிட்டு அவர் செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை: கலைஞர் நினைவிடத்தையும் பார்வையிடுகிறார் appeared first on Dinakaran.