வட மாநிலத்தினர் உட்பட 5 பேர் கைது 57 கிலோ பறிமுதல் திருவண்ணாமலையில் குட்கா விற்பனை செய்த

திருவண்ணாமலை, ஆக. 18: திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட குட்காவிற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் இன் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, திருவண்ணாமலை சிவன்படத் தெருவை சேர்ந்த பரஸ்ராம் (48), அவரது மகன் நர்பத் (21), ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான மளிகை கடையில் குக்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அய்யங்குள தெருவை சேர்ந்த நாதூராம் (63) அவரது மகன் சதிஷ்குமார் (34) ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான மளிகை கடையில் குட்கா வெட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல், திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் துரைசாமி (39) என்பவர் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் குக்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் ₹65 ஆயிரம் மதிப்பிலான சுமார் 57 கிலோ குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வட மாநிலத்தினர் உட்பட 5 பேர் கைது 57 கிலோ பறிமுதல் திருவண்ணாமலையில் குட்கா விற்பனை செய்த appeared first on Dinakaran.

Related Stories: