கோவை: கோவை காந்திபுரம் அருகே நஞ்சப்பா சாலையின் ஓரத்திலிருந்த மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் சஞ்சய் (30) என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் சேதமடைந்தன. மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றி வருகின்றனர்.