அதன்படி கடந்த 2022ம் ஆண்டில் தூக்கு தேர்விழா நடைபெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து தூக்கு தேர்விழா நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. கடையத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியிலிருந்து 64 அடி உயரமுள்ள 3 டன் எடை கொண்ட தூக்கு தேரினை அப்பகுதியினர் இளைஞர்கள் 300 பேர் தோளில் சுமந்தவாரு கிராமத்தினை தூக்கி வந்தனர்.
இந்நிலையில் காலையில் தேரினை சுமந்தபடி இளைஞர்கள் சென்றபோது தேரானது சரிந்து கீழே விழுந்தது. தேர் கீழே விழுந்ததில் ஐந்து நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டன. காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சாய்ந்த தேரினை மீண்டும் தூக்கி நிறுத்தி தேரோட்டம் மீண்டும் துவங்கி நடைபெற்றன.
The post விழுப்புரம் சூலப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா: 64அடி உயரமுள்ள தேர் சரிந்து விபத்து: உயிர் தப்பிய பக்தர்கள்..!! appeared first on Dinakaran.