இதன் காரணமாக, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் சொகுசாக செல்வதற்கு திட்டமிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்வர். இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஆம்னி பேருந்துகள் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சுமார் ரூ.3000 வரை இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
The post தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்வு..!! appeared first on Dinakaran.