அதன்பின்பு பகல் 12.35 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மாலை 3.10 மணிக்கு பக்டோரா சென்றடைகிறது. அதே விமானம் மாலை 3.40 மணிக்கு பக்டோரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு சென்னை வந்து அடைகிறது.தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மாலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றடைகிறது. பின்பு விமானம் இரவு 8.50 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை திரும்புகிறது.
The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 6 புதிய விமான சேவைகள் தொடக்கம் appeared first on Dinakaran.