இந்தநிலையில் திருவள்ளூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீடான புல்லரம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது ராஜேஸ்வரிக்கும், சுரேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி புட்லூர் அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சுரேஷின் முதல் மனைவி பார்வதி, தனது கணவருடன் தகாத உறவில் உள்ள ராஜேஸ்வரியை காய்கறிக் கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பி விட்டதாக தெரிகிறது.
ஆனால் சுரேஷின் காய்கறிக் கடையை ராஜேஸ்வரி கவனித்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பார்வதி, கடந்த 9ம் தேதி காலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு வந்து, காய்கறிக் கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றினார். அப்போது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பற்றியது. தீ மளமளவென பற்றியதையடுத்து ராஜேஸ்வரி கதறினார். அவர் தீயில் எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சுரேஷ் (40), சுரேஷின் மனைவி பார்வதி (36), உறவினர்கள் விஜயா (55), மோகன் (28), முரளி (34), நதியா (33), லட்சுமி (32), சங்கர் (40) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ராஜேஸ்வரியை பார்வதி பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பொறி பரவி ராஜேஸ்வரி எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கொலை வழக்காக இதனை மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post 2வது திருமணம் செய்த விவகாரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை; வீடியோ காட்சி வைரல் appeared first on Dinakaran.