மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் திறப்பு 35,000 கன அடியாக அதிகரிப்பு. 16 கண் மதகு வழியாக 13,500 கன அடியும், நீர்மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் நீர் வெளியேற்றம். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரிப்பு. இன்று காலை வினாடிக்கு 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: