இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாகப் பரவும் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில், ‘இது முற்றிலும் வதந்தியே, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆலோசனையும் இல்லை. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம்’ என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
The post தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து பரவும் தகவல் முற்றிலும் வதந்தி: தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.